திங்கள், 27 ஜூலை, 2015

எப்போதும், மாணவர்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கலாம், தன் கடைசி வினாடியையும் மாணவர்கள் மத்தியில், அவர்களுக்காகவே செலவிட்டு, தன் மூச்சுக்காற்றை, இளைய தலைமுறையினரின் இதயங்களில் ஊடுருவி, விண்ணில் கலந்து விட்டார்.ஜவகர்லால் நேருவுக்கு பின், காஷ்மீரில் இருந்து, கன்னியாகுமரி வரையுள்ள நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அழுத்தமாக இடம்பிடித்து, அவர்களின் பேரன்பை பெற்ற, 'அணு நாயகன்' என்ற மகத்தான மாமனிதரின் மரணம், நாட்டு மக்களை, கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.